அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Monday, September 8, 2008

ரமழான் மாதத்தில் தினமும் ஓதும் துஆ

ரமழான் மாதத்தில் தினமும் ஓதும் துஆ
ஒவ்வொரு நாளுடைய நோன்பிற்கும் அதில் ஓதுகின்ற திக்ருகளுக்கும், துஆக்களுக்கும் அதிகமான நன்மைகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தொட்டும். அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு சிறப்புக்கள் வாய்ந்த நன்மைகள் நிறைந்த துஆக்கள் அதிகமாக இருக்கின்றது. விரிவஞ்சி சுருக்கமாக அவைகளை இங்கு குறிப்பிடுகிறோம்.
1- முதலாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ صِیَامِى فِيهِ صِیَامَ الصَّائِمِينَ وَ قِیَامِى فِيهِ قِیَامَ الْقَائِمِينَ وَ نَبِّهْنِى فِيهِ عَنْ نَوْمَةِ الْغَافِلِينَ وَ هَبْ لِى جُرْمِى فِيهِ یَا إِلَهَ الْعَالَمِينَ وَ اعْفُ عَنِّى یَا عَافِيا عَنِ الْمُجْرِمِينَ.
இறைவா, இம்மாதத்தில் எனது நோன்பை உண்மையான நோன்பாளிகளின் நோன்பாகவும் அவ்வாறே எனது இரவு வணக்கத்தையும் உண்மையான வணக்கவாளிகளின் வணக்கமாகவும் ஆக்கிக் கொடு. அதில் அலட்சியக்காரரின் தூக்கத்திலிருந்து என்னை விழிக்க வைப்பாயாக. எனது தவறுகளை மன்னித்து குற்றவாளிகளிலிருந்தும் விலக்கி வைப்பாயாக.
2- இரண்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ قَرِّبْنِى فِيهِ إِلَى مَرْضَاتِكَ وَ جَنِّبْنِى فِيهِ مِنْ سَخَطِكَ وَ نَقِمَاتِكَ وَ وَفِّقْنِى فِيهِ لِقِرَاءَةِ آیَاتِكَ بِرَحْمَتِكَ یَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
இறைவா, இம்மாதத்தில் உனது திருப்திக்கு அருகில் என்னை ஆக்கி உனது கோபத்திலும் அதிருப்தியிலும் இருந்து என்னை தூரமாக்கு. இந்நாளில் உனது மறைவசனங்களை ஓதுகின்ற பாக்கியத்தையும் எனக்குத் தந்தருள். கருணையுள்ள ரஹ்மானே.
3- மூன்றாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْزُقْنِى فِيهِ الذِّهْنَ وَ التَّنْبِيهَ وَ بَاعِدْنِى فِيهِ مِنَ السَّفَاهَةِ وَ التَّمْوِيهِ وَ اجْعَلْ لِى نَصِيبا مِنْ كُلِّ خَیْرٍ تُنْزِلُ فِيهِ بِجُودِكَ یَا أَجْوَدَ الْأَجْوَدِينَ.
இறைவா, இம்மாதத்தில் விழிப்புணர்வையும் அலட்சியமின்மையையும் தருவாயாக. மடத்தனத்திலும் சிறுமையிலும் இருந்து என்னை விலக்கிவிடுவாயாக. இந்நாளில் நீ இறக்கி வைக்கின்ற எல்லா நன்மைகளிலும் பங்காளியாக என்னையும் ஆக்கி வை. பெரும் கொடையாளனே.
4 - நான்காவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ قَوِّنِى فِيهِ عَلَى إِقَامَةِ أَمْرِكَ وَ أَذِقْنِى فِيهِ حَلاوَةَ ذِكْرِكَ وَ أَوْزِعْنِى فِيهِ لِأَدَاءِ شُكْرِكَ بِكَرَمِكَ وَ احْفَظْنِى فِيهِ بِحِفْظِكَ وَ سِتْرِكَ یَا أَبْصَرَ النَّاظِرِينَ.
இறைவா,இம்மாதத்தில் உனது கட்டளையை நிறைவேற்றும் சக்தியை எனக்கு கொடு. உன்னை தியானிப்பதிலுள்ள இன்பத்தை எனக்குக் கொடு. உனது கொடைகளுக்கு நன்றி சொல்லும் தன்மையை எனக்குக் கொடு. உனது பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் என்னைப பாதுகாப்பாயாக. கண்காணிப்பவர்களில் மிகச் சிறந்தவனே.
5- ஐந்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُسْتَغْفِرِينَ وَ اجْعَلْنِى فِيهِ مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ الْقَانِتِينَ وَ اجْعَلْنِى فِيهِ مِنْ أَوْلِیَائِكَ الْمُقَرَّبِينَ بِرَأْفَتِكَ یَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
இறைவா, இம்மாதத்தில் பாவமன்னிப்புக் கோருவோரில் ஒருவனாகவும் மனநிறைவு கொண்ட நல்லடியார்களில் ஒருவனாகவும் உனது நெருக்கத்துக்குரிய நேசர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்குவாயாக. இரக்கமும் கருணையுமுள்ள நாயனே.
6 - ஆறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ لا تَخْذُلْنِى فِيهِ لِتَعَرُّضِ مَعْصِیَتِكَ وَ لا تَضْرِبْنِى بِسِیَاطِ نَقِمَتِكَ وَ زَحْزِحْنِى فِيهِ مِنْ مُوجِبَاتِ سَخَطِكَ بِمَنِّكَ وَ أَیَادِيكَ یَا مُنْتَهَى رَغْبَةِ الرَّاغِبِينَ.
இறைவா, இம்மாதத்தில் உனக்கு மாறுசெய்யும் இழிநிலை ஏற்படுவதில் இருந்து என்னை காப்பாயாக. உன் தண்டனையின் சாட்டையால் என்னை தண்டிக்காதே. உன் கோபத்தை வருவிக்கும் செய்கைகளில் இருந்து உனது கருணையாலும் கொடையாலும் என்னை துரத்தவரி விடு. ஆவல் கொண்டோரின் இறுதி இலட்சியம் ஆனவனே.
7 - ஏழாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ أَعِنِّى فِيهِ عَلَى صِیَامِهِ وَ قِیَامِهِ وَ جَنِّبْنِى فِيهِ مِنْ هَفَوَاتِهِ وَ آثَامِهِ وَ ارْزُقْنِى فِيهِ ذِكْرَكَ بِدَوَامِهِ بِتَوْفِيقِكَ یَا هَادِىَ الْمُضِلِّينَ.
இறைவா, இம்மாதத்தில் நோன்பு நோற்கவும இரவில் வணக்கம் புரியவும் எனக்கு உதவி செய்வாயாக. இந்நாளில் கேளிக்கையிலிருந்தும் பாவச்செயல்களில் இருந்தும் என்னை பாதுகாப்பாயாக. உன் அருட்கொடையால் நிதமும் உன் நினைவில் இருப்பதற்கு அருள் செய்வாயாக. வழி தவறியவர்களை நேர்வழிப்படுத்துபவனே.
8 - எட்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْزُقْنِى فِيهِ رَحْمَةَ الْأَیْتَامِ وَ إِطْعَامَ الطَّعَامِ وَ إِفْشَاءَ السَّلامِ وَ صُحْبَةَ الْكِرَامِ بِطَوْلِكَ یَا مَلْجَأَ الْآمِلِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் கொடை மகிமையால் அநாதைகளுக்கு இரக்கம் காட்டவும் பசித்தவர்களுக்கு உணவளிக்கவும் சமாதானத்தைப் பரப்பவும் கண்ணியவான்களுடன் நல்லுறவு கொள்ளவும் எனக்கு அருள் செய்வாயாக. எதிர்பார்பவர்களின் புகலிடம் ஆனவனே.
9 - ஒன்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ لِى فِيهِ نَصِيبا مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ وَ اهْدِنِى فِيهِ لِبَرَاهِينِكَ السَّاطِعَةِ وَ خُذْ بِنَاصِیَتِى إِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ بِمَحَبَّتِكَ یَا أَمَلَ الْمُشْتَاقِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் விசாலமான ரஹ்மத்தில் பங்காளியாக என்னை ஆக்குவாயாக. இந்நாளில் உனது ஒளிமயமான அத்தாட்சியின் பால் என்னை வழிநடாத்துவாயாக. எனது பரிபூரண அன்பு நிறைந்த திருப்பொருத்ததின் பால் என்னை அழைத்துச் செல். ஆசை கொண்டோரின் நம்பிக்கை ஆனவனே.
10 - பத்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُتَوَكِّلِينَ عَلَیْكَ وَ اجْعَلْنِى فِيهِ مِنَ الْفَائِزِينَ لَدَیْكَ وَ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُقَرَّبِينَ إِلَیْكَ بِإِحْسَانِكَ یَا غَایَةَ الطَّالِبِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் மீது நம்பிக்கை வைத்தோரில் ஒருவனாகவும் உன்னிடத்தில் ஜெயம் பெற்றோரில் ஒருவனாகவும் உனக்கு நெருங்கிய நேசர்களில் ஒருவனாகவும் உன் தாராளத் தன்மையைக் கொண்டு என்னை ஆக்கிவிடுவாயாக. நாட்டம் கொண்டோர்களின் தேட்டம் ஆனவனே.
11 - பதினோராவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ حَبِّبْ إِلَىَّ فِيهِ الْإِحْسَانَ وَ كَرِّهْ إِلَىَّ فِيهِ الْفُسُوقَ وَ الْعِصْیَانَ وَ حَرِّمْ عَلَىَّ فِيهِ السَّخَطَ وَ النِّيرَانَ بِعَوْنِكَ یَا غِیَاثَ الْمُسْتَغِيثِينَ.
இறைவா இம்மாதத்தில், நற்கருமங்கள் மீதுள்ள பற்றுதலை அதிகப் படுத்துவாயாக. பாவங்களையும் தீமைகளையும் வெறுக்கச் செய்வாயாக. உன் ஒத்தாசையால் உனது கோபத்தையும் நரக நெருப்பையும் எனக்கு என்றென்றும் தடை செய்வாயாக. அவலக் குரல் எழுப்புபவர்களுக்கு செவிமடுப்போனே.
12 - பனிரெண்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ زَیِّنِّى فِيهِ بِالسِّتْرِ وَ الْعَفَافِ وَ اسْتُرْنِى فِيهِ بِلِبَاسِ الْقُنُوعِ وَ الْكَفَافِ وَ احْمِلْنِى فِيهِ عَلَى الْعَدْلِ وَ الْإِنْصَافِ وَ آمِنِّى فِيهِ مِنْ كُلِّ مَا أَخَافُ بِعِصْمَتِكَ یَا عِصْمَةَ الْخَائِفِينَ.
இறைவா இம்மாதத்தில் அறம் காப்பதன் மூலமும் மறைப்பதன் மூலமும் என்னை அழகு படுத்துவாயாக. திருப்தியினதும் மனநிறைவினதும் ஆடையால் என்னை போர்த்துவாயாக. நீதியையும் நேர்மையையும் சுமக்க வைப்பாயாக. எனது எல்லாவித அச்சங்களில் இருந்தும் பாதுகாப்புத் தருவாயாக. அச்சம் கொண்டோரை பாதுகாப்பளிப்பவனே.
13 - பதின் மூன்றாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ طَهِّرْنِى فِيهِ مِنَ الدَّنَسِ وَ الْأَقْذَارِ وَ صَبِّرْنِى فِيهِ عَلَى كَائِنَاتِ الْأَقْدَارِ وَ وَفِّقْنِى فِيهِ لِلتُّقَى وَ صُحْبَةِ الْأَبْرَارِ بِعَوْنِكَ یَا قُرَّةَ عَیْنِ الْمَسَاكِينِ.
இறைவா இம்மாதத்தில், அசிங்கங்களிலிருந்தும் அசுத்தங்களிலிருந்தும்என்னை பரிசுத்தப்படுத்துவாயாக. விரக்தியூட்டும் நிகழ்வுகளில் எனக்கு பொறுமையை தந்தருள். இறையச்சம் கொள்ளவும் நல்லடியார்களின் சகவாசத்தைப் பெறவும் உன் உதவியால் எனக்கு கிருபை செய்வாயாக. எளியோரை மகிழ்விப்பவனே.
14 - பதின் நான்காவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ لا تُؤَاخِذْنِى فِيهِ بِالْعَثَرَاتِ وَ أَقِلْنِى فِيهِ مِنَ الْخَطَایَا وَ الْهَفَوَاتِ وَ لا تَجْعَلْنِى فِيهِ غَرَضا لِلْبَلایَا وَ الْآفَاتِ بِعِزَّتِكَ یَا عِزَّ الْمُسْلِمِينَ
இறைவா இம்மாதத்தில் எனது தப்புகளுக்காக என்னை தண்டிக்காதே. எனது பிழைகளிலிருந்தும் அறியாமையிலிருந்தும் என்னை காப்பாயாக. சோதனைகளும் ஆபத்துகளும் இறங்கும் தளமாக என்னை ஆக்கி விடாதே. முஸ்லிம்களின் கண்ணியத்தை காப்பவனே.
15 - பதினைந்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْزُقْنِی فِيهِ طَاعَةَ الْخَاشِعِينَ وَ اشْرَحْ فِيهِ صَدْرِی بِإِنَابَةِ الْمُخْبِتِينَ بِأَمَانِكَ یَا أَمَانَ الْخَائِفِينَ
இறைவா இம்மாதத்தில், பணிவச்சம் கொண்டோரின் பின்பற்றுதலை எனக்கு அருள்வாயாக. உன் அபயத்தின் மகிமையால் உன்பால் திரும்பியோரின் இதய விசாலத்தை எனக்கு அருளுவாயாக. அச்சம் கொண்டோருக்கு அபயமளிப்பவனே.
16 - பதினாறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ وَفِّقْنِى فِيهِ لِمُوَافَقَةِ الْأَبْرَارِ وَ جَنِّبْنِى فِيهِ مُرَافَقَةَ الْأَشْرَارِ وَ آوِنِى فِيهِ بِرَحْمَتِكَ إِلَى [فِى‏] دَارِ الْقَرَارِ بِإِلَهِیَّتِكَ یَا إِلَهَ الْعَالَمِينَ.
இறைவா இம்மாதத்தில் நல்லவர்களின் சகவாசத்தைப் பெற்றுத் தருவாயாக. தீயோரின் உறவுகளிலிருந்தும் தூரமாக்குவாயாக. உன் அருளால் நிரந்தர வீட்டில் புகலிடம் தருவாயாக. அகிலத்தோரின் இறையோனே.
17 - பதினேழாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اهْدِنِى فِيهِ لِصَالِحِ الْأَعْمَالِ وَ اقْضِ لِى فِيهِ الْحَوَائِجَ وَ الْآمَالَ یَا مَنْ لا یَحْتَاجُ إِلَى التَّفْسِيرِ وَ السُّؤَالِ یَا عَالِما بِمَا فِى صُدُورِ الْعَالَمِينَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ.
இறைவா இம்மாதத்தில் நற்செய்கையின் பால் வழிநடாத்துவாயாக. என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைப்பாயாக. கேற்பதற்கோ விளக்குவதற்கோ அவசியமில்லாதவனே. படைப்புக்களின் இதயங்களில் உள்ளவற்றை தெரிந்து வைத்துள்ளவனே. உனது தூதர் நபி முஹம்மது மீதும் அவர்கள் பரிசுத்த குடும்பத்தினர் மீதும் ஆசீர்வதிப்பாயாக.
18 - பதினெட்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ نَبِّهْنِى فِيهِ لِبَرَكَاتِ أَسْحَارِهِ وَ نَوِّرْ فِيهِ قَلْبِى بِضِیَاءِ أَنْوَارِهِ وَ خُذْ بِكُلِّ أَعْضَائِى إِلَى اتِّبَاعِ آثَارِهِ بِنُورِكَ یَا مُنَوِّرَ قُلُوبِ الْعَارِفِينَ.
இறைவா இம்மாதத்தில் பின்னிரவில் மகிமை பற்றிய விழிப்பைத் தருவாயாக. அதன் ஜோதியின் பிரகாசத்தால் என்னிதயத்தை ஒளிமயமாக்கி வைப்பாயாக. எனது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் உனது ஜோதியைக் கொண்டு அதன் வழியில் இட்டுச் செல்வாயாக. ஞானிகளின் இதயங்களை ஒளிமயமாக்குபவனே.
19 - பத்தொன்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ وَفِّرْ فِيهِ حَظِّى مِنْ بَرَكَاتِهِ وَ سَهِّلْ سَبِيلِى إِلَى خَیْرَاتِهِ وَ لا تَحْرِمْنِى قَبُولَ حَسَنَاتِهِ یَا هَادِيا إِلَى الْحَقِّ الْمُبِينِ.
இறைவா இம்மாதத்தில், அதன் பரக்கத்துக்களை அடையும் பாக்கியத்தை எனக்குத் தருவாயாக. அதன் நலன்ளை பெறும் வழியை எனக்கு இலகுபடுத்து. அதில் செய்யும் நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு எனக்கு தடை செய்து விடாதே. தெளிவான உண்மையின் பால் வழிகாட்டுபவனே.
20 - இருபதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ افْتَحْ لِى فِيهِ أَبْوَابَ الْجِنَانِ وَ أَغْلِقْ عَنِّى فِيهِ أَبْوَابَ النِّيرَانِ وَ وَفِّقْنِى فِيهِ لِتِلاوَةِ الْقُرْآنِ یَا مُنْزِلَ السَّكِينَةِ فِى قُلُوبِ الْمُؤْمِنِينَ.
இறைவா இம்மாதத்தில், சுவர்க்கத்தின் வாசல்களை திறந்து வைப்பாயாக. நரகத்தின் வாசல்ளை என் மீது மூடி விடுவாயாக. குர்ஆனை அதிகமாக ஓதும் பாக்கியத்தை தருவாயாக. விசுவாசிகளின் உள்ளங்களை சாந்தத்தை இறக்கி வைப்பவனே.
21 - இருபத்தி ஓறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ لِى فِيهِ إِلَى مَرْضَاتِكَ دَلِيلا وَ لا تَجْعَلْ لِلشَّیْطَانِ فِيهِ عَلَىَّ سَبِيلا وَ اجْعَلِ الْجَنَّةَ لِى مَنْزِلا وَ مَقِيلا یَا قَاضِىَ حَوَائِجِ الطَّالِبِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் திருப்பொருத்தத்தை அடைவதற்கு வழிகாட்டலைத் தந்தருள். ஷைத்தானுக்கு என்னை வழிகெடுக்கும் வாய்ப்பை கொடுக்காதே. நான் இறுதியில் தங்கி வாழும் இடமாக சுவர்க்கத்தை ஆக்கி வைப்பாயாக. கேற்போரின் நாட்டங்களை நிறைவேற்றி வைப்போனே.
22 - இருபத்தி ரெண்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ افْتَحْ لِى فِيهِ أَبْوَابَ فَضْلِكَ وَ أَنْزِلْ عَلَىَّ فِيهِ بَرَكَاتِكَ وَ وَفِّقْنِى فِيهِ لِمُوجِبَاتِ مَرْضَاتِكَ وَ أَسْكِنِّى فِيهِ بُحْبُوحَاتِ جَنَّاتِكَ یَا مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ.
இறைவா இம்மாதத்தில் உன்னுடைய நற்பேறுகளின் கதவுகளை எனக்குத் திறந்து விடு. உன்னுடைய பரக்கத்துக்களை என்மீது சொரிந்து விடுவாயாக. உன் திருப்பொருத்தத்தை அடையும் பாக்கியத்தை தருவாயாக. உன்னுடைய சுவர்க்கங்களின் சூழலில் என்னை வாழ வைப்பாயாக. அல்லல் படுபோரின் அழைப்பை செவிமடுப்போனே.
23 - இருபத்தி மூன்றாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اغْسِلْنِى فِيهِ مِنَ الذُّنُوبِ وَ طَهِّرْنِى فِيهِ مِنَ الْعُیُوبِ وَ امْتَحِنْ قَلْبِى فِيهِ بِتَقْوَى الْقُلُوبِ یَا مُقِيلَ عَثَرَاتِ الْمُذْنِبِينَ.
இறைவா இம்மாதத்தில் பாவங்களில் இருந்து என்னை பரிசுத்தப்படுத்துவாயாக. எனது குறைகளை கழுவி விடுவாயாக. என்னிதயத்தை இதயச்சத்தால் நிரப்புவாயாக. பாவிகளின் குறைகளை நீக்கிவிடுபோனே.
24 - இருபத்தி நான்காவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ فِيهِ مَا یُرْضِيكَ وَ أَعُوذُ بِكَ مِمَّا یُؤْذِيكَ وَ أَسْأَلُكَ التَّوْفِيقَ فِيهِ لِأَنْ أُطِيعَكَ وَ لا أَعْصِیَكَ یَا جَوَادَ السَّائِلِينَ.
இறைவா இம்மாதத்தில் உன்னை மகிழ்விக்கின்றவற்றை உன்னிடம் கோருகின்றேன். உன்னை கோபிக்கச் செய்கின்வற்றில் உன்னிடம் இருந்து பாதுகாவல் தேடுகின்றேன். உன்னை பணிந்து நடக்கவும் உனக்கு மாறு செய்யாமல் இருக்கவும் எனக்கு வரம் கிடைக்குமாறு உன்னிடம் கோருகின்றேன், கேட்போருக்கு அள்ளிக் கொடுப்போனே.
25 - இருபத்தி ஐந்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْنِى فِيهِ مُحِبّا لِأَوْلِیَائِكَ وَ مُعَادِيا لِأَعْدَائِكَ مُسْتَنّا بِسُنَّةِ خَاتَمِ أَنْبِیَائِكَ یَا عَاصِمَ قُلُوبِ النَّبِیِّينَ.
இறைவா இம்மாதத்தில் உன் நேசர்களை நேசிப்பவனாகவும் உன் எதிரிகளை விரோதிப்பனாகவும் உனது இறுதித் தூதரின் வழிமுறைகளைப் பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக. நபிமார்களின் இதயத்தை பரிசுத்தமாக்கியவனே.
26 - இருபத்தி ஆறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ سَعْیِى فِيهِ مَشْكُورا وَ ذَنْبِى فِيهِ مَغْفُورا وَ عَمَلِى فِيهِ مَقْبُولا وَ عَیْبِى فِيهِ مَسْتُورا یَا أَسْمَعَ السَّامِعِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் நேசர்களை நேசிப்பவனாகவும் உன் எதிரிகளை விரோதிப்பனாகவும் உனது இறுதித் தூதரின் வழிமுறைகளைப் பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக. நபிமார்களின் இதயத்தை பரிசுத்தமாக்கியவனே.
27 - இருபத்தி ஏழாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ سَعْیِى فِيهِ مَشْكُورا وَ ذَنْبِى فِيهِ مَغْفُورا وَ عَمَلِى فِيهِ مَقْبُولا وَ عَیْبِى فِيهِ مَسْتُورا یَا أَسْمَعَ السَّامِعِينَ.
இறைவா இம்மாதத்தில் லைலத்துல் கதரின் சிறப்பை எனக்கு அருளுவாயாக. எனது விவகாரங்களை கஷ்டத்தில் இருந்து இலேசானவையாக மாற்றிவிடுவாயாக. நான் கோருகின்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்டு என் பாவச் சுமையை நீக்கி விடுவாயாக. நல்லடியார்கள் மீது இரக்கம் கொண்டவனே.
28 - இருபத்தி எட்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ وَفِّرْ حَظِّى فِيهِ مِنَ النَّوَافِلِ وَ أَكْرِمْنِى فِيهِ بِإِحْضَارِ الْمَسَائِلِ وَ قَرِّبْ فِيهِ وَسِيلَتِى إِلَیْكَ مِنْ بَیْنِ الْوَسَائِلِ یَا مَنْ لا یَشْغَلُهُ إِلْحَاحُ الْمُلِحِّينَ.
இறைவா இம்மாதத்தில் மேலதிக வணக்கங்களில் அதிகம் ஈடுபடும் பாக்கியத்தைத் தருவாயாக. அவசியமான தேவைகளைத் தந்து கண்ணியப் படுத்துவாயாக. உன்னை நெருங்கும் வழியை எனக்கு மிக நெருக்கமாக்கித் தருவாயாக. வற்புறுத்திக் கேட்பதால் சலிப்படையாதவனே.
29 - இருபத்தி ஒன்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ غَشِّنِى فِيهِ بِالرَّحْمَةِ وَ ارْزُقْنِى فِيهِ التَّوْفِيقَ وَ الْعِصْمَةَ وَ طَهِّرْ قَلْبِى مِنْ غَیَاهِبِ التُّهَمَةِ یَا رَحِيما بِعِبَادِهِ الْمُؤْمِنِينَ.
இறைவா இம்மாதத்தில் மேலதிக வணக்கங்களில் அதிகம் ஈடுபடும் பாக்கியத்தைத் தருவாயாக. அவசியமான தேவைகளைத் தந்து கண்ணியப் படுத்துவாயாக. உன்னை நெருங்கும் வழியை எனக்கு மிக நெருக்கமாக்கித் தருவாயாக. வற்புறுத்திக் கேட்பதால் சலிப்படையாதவனே.
30 - முப்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ صِیَامِى فِيهِ بِالشُّكْرِ وَ الْقَبُولِ عَلَى مَا تَرْضَاهُ وَ یَرْضَاهُ الرَّسُولُ مُحْكَمَةً فُرُوعُهُ بِالْأُصُولِ بِحَقِّ سَیِّدِنَا مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
இறைவா இம்மாதத்தில் உன் திருநபியினதும் அவரது திருக்குடும்பத்தினதும் பொருட்டால் எனது நோன்பை நீயும் உன் தூதரும் மகிழ்கின்ற விதத்தில் கிளைகள் அடிப்படைகளில் மிகக்கனதியாகப் பொருந்தியவாறு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் பிரதி பலன் தரக் கூடியதாகவும் ஆக்குவாயாக. அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வே ..