அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, October 12, 2008

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'சொர்க்கத்தில் மக்களை நுழையச் செய்வதில் மிக அதிகமானவை எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இறையச்சமும், நற்குணமும்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நரகத்தில் மக்களை அதிக அளவில் நுழையச் செய்வது எது? என்று கேட்கப்பட்டது. ''நாவும், மறைவுறுப்பும் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 627)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மூஃமின்களில் இறைநம்பிக்கையில் முழுமையானவர், அவர்களில் குணத்தால் மிக அழகியவராவார். தங்களின் மனைவியரிடம் சிறந்தவர் தான் உங்களில் சிறந்தவர் ஆவார்.'' ஏன்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 628)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக ஒரு மூஃமின், தன் அழகிய குணத்தின் காரணமாக, நின்று வணங்கி நோன்பு நோற்கக் கூடியவரின் தகுதியை அடைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 629)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் ஆவான். ஒவ்வொரு காரியங்களிலும் அவன் மென்மையையே விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 633)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மென்மை, இடம்பெறுகின்ற எந்தக் காரியமும், அது அழகாக்கி விடுகிறது. மேலும் அது இடம் பெறாத எதுவும், சேதப்படுத்தி விடுகிறது'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 635)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடக்காதீர்கள். (மக்களை) வாழ்த்துங்கள். (அவர்களை) வெறுக்காதீர்கள்.'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 637)

நபிமொழி

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில், ''ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?'' என்று கேட்பான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?'' என்று மனிதன் பதில் அளிப்பான். ''என் அடியான் இன்னவன் நோயாளியாக இருந்தான். அவனை நீ விசாரிக்கவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனின் நோய் பற்றி விசாரித்திருந்தால், அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று அல்லாஹ் கூறிவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்தேன். எனக்கு நீ உணவு தரவில்லையே!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு எப்படி உணவளிப்பேன்?'' என்று மனிதன் கேட்பான்.

''என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால்,அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)

அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நோயாளியை நலன் விசாரியுங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். அடிமையை விடுவியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 897)

ஸவ்பான் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒரு முஸ்லிம், தன் முஸ்லிமான சகோதரனை நலன் விசாரித்தால், அவனிடமிருந்து அவன் பிரியும் வரை சொர்க்கத்தின் 'குர்ஃபத்'ல் இருந்து கொண்டிருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தின் ''குர்ஃபத்'' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது ''சொர்க்கத்தின் பழம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 898