அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, November 23, 2008

ஹதித்

1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

“இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்.”,
என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.
[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
” நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.”
மேலும் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக நான் எண்ணுவதாவது,

” ஒரு மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான். அவனே அதைப் பாதுகாப்பவனும் ஆவான். எனவே நீங்கள் அனைவரும் தமக்கு கீழுள்ள குழந்தைகளுக்கும், செல்வத்திற்கும் பொறுப்பாளி ஆவீர்கள்” (புகாரி தொகுதி : 3, புத்தகம் : 41, எண் : 592)

ஸஹல் பின் ஸா’த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (ரதியல்லாஹுஅன்ஹும்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் , ” ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) என்னிடத்தில் வந்து,
‘ முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ‍ ஒரு நம்பிக்கையாளனின் மேன்மை, அவனின் இரவு வணக்கத்தில் / ஃகியாமில் உள்ளது, மற்றும் அவனது கண்ணியம், அவன் பொருளுதவிக்காக மற்றவர்களை எதிர்பாராமல் வாழ்வதில் உள்ளது’
என்று கூறினார்”.
[ அத் தபரானி அவர்கள் 'அல் அஸ்வத்'தில் பதிவு செய்துள்ளார். பைஹகீயின் நூலிலும், இன்னும் பலரின் நூலிலும் உள்ளது. அல்பானீ அவர்கள் தன்னுடைய 'அஸ் ஸஹீஹாஹ்' நூலில் (பக்கம்-831) 'ஹஸன்' தரமுள்ளது என பதிவு செய்துள்ளனர்]

குர்ஆன் துஆக்கள்


“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (2:197)
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
ரப்பனா தஃகப்பல் மின்னா இன்னக அன்த ஸமீயுல் அ’லீம்


“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:128)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
ரப்பனா வஜ்’அல்னா முஸ்லிமய்னி லக வ மின் ஜுர்ரியத்தினா உம்மதன் முஸ்லிமதன்லக வ ‘ஆரினா மனாஸிக்னா வ துப் ‘அலய்னா இன்னக அன்த தவ்வாபுர் ரஹீம்

“ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (2:201)
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனதன் வ ஃஃபில் ‘ஆகிரதி ஹஸனதன் வஃகீனா அஜாபன் நார்

“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (2:250)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَரப்பனா அஃப்ரிக் ‘அலய்னா சப்ரன் வ த்சப்பித் அக்தாமனா வன் சுர்நா அலல் ஃகவ்மில் காஃபிரீன்

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!”رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَاரப்பனா லா துவா ஃகிஜ்நா இன் நசீனா அவ் அஃக்தானா

“எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!”
رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا
ரப்பனா வ‌லா தஹ்மில் ‘அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தனா அல்த் தீன மின் ஃகப்லினா

“எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286)
رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا
فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
ரப்பனா வலா துஹம்மில்னா மா லா தாஃகத லனா பிஹி வஆஃபு அன்னா வக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்த மௌலானாஃபன்சுர்னா ‘ஆலா அல்ஃகவ்மி அல் காஃபிரீனா

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (3:8)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
ரப்பனா லா துஜிக் ஃகுலூபுனா ப’த இஜ் ஹதய்தனா வ ஹப்லனா மின் ல‌துன்க ரஹ்மத்தன் இன்னக அன்தல் வஹ்ஹாப்

“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (3:9)رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
ரப்பனா இன்னக ஜாமி’உன் நாஸி லி யவ்மின் லா ரய்ப ஃபீஹீ இன்னல்லாஹ லா யுஃக்லிஃபுல் மீ ‘ஆத்

”எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” (3:16)رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِரப்பனா இன்னனா ஆமன்னா ஃபாக் ஃபிர்லனா ஜுனூபனா வ‌ கீனா அஜா பன் நார்