அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Wednesday, October 29, 2008

பெண் குழந்தைகள் நரகின் திரை.

பெண் குழந்தைகள் நரகின் திரை.

1688. ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், 'இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.
புஹாரி :1418 ஆயிஷா (ரலி).:1418 ஆயிஷா (ரலி).


நபி ஆதம் (அலை) நபி மூஸா (அலை) தர்க்கம்.

1700. (இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் 'ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்'' என்றார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் 'மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?' என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; என மூன்று முறை ' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி : 6614 அபூஹுரைரா (ரலி) .


அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு

அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு -
1. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தவை. அவை என்னவெனில் இறைநம்பிக்கையும் முஸ்லிம்களின் நலன் நாடுதலும் ஆகும்.
2. இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விட மோசமானவை. அவை என்னவெனில் இறைவனோடு மற்றவர்களை இணையாக்குவதும் முஸ்லிம்களுக்கு கேடு விளைவிப்பதும் அவர்களுடன் மோசமாக நடந்துகொள்வதும் ஆகும்.

"சந்தேகப்படுவதிலிருந்து விலகி இருங்கள். ஏனெனில் சந்தேகத்துடன்சொல்லப்படும் விஷயம் மிகப் பெரும் பொய் ஆகும்.

பிறருடைய நன்மை, தீமைபற்றி அறிய வேண்டும் என்று செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராயாதீர்கள்.

மற்றவர்களை விட அதிகமானவிலையைச் சொல்லாதீர்கள்.
பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவர் மீதுஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள்.

பரஸ்பரம் பகைமை பாராட்டாதீர்கள்.

தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்.

இறைவனின் நல்லடியார்களாக, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்."


அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

அம்ருபின் அபச (ரலி) அறிவிக்கின்றார்கள். நான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று "இறைத்தூதரே! 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டேன். அண்ணல் நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள் : "பொறுமையும் வள்ளல்குணமும்"

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்

இல்லை என்று சொல்லாத உயர்ந்த உள்ளம்!


அஸ்மா(ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "செலவிடு. எண்ணி எண்ணிக் கொடுக்காதே. இறைவனும் உனக்கு எண்ணிக்கொடுப்பான். கொடுக்காமல் மறுத்து விடாதே. இறைவனும் உனக்குக் கொடுக்கமறுத்து விடுவான். உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு."நூல்: புகாரி. முஸ்லிம்


அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்கள்:


"மனிதர்களுடன் கருணையுடன் நடந்துக் கொள்ளாதவன் மீது இறைவனும்கருணை காட்ட மாட்டான்." அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி)நூல்: புஹாரி, முஸ்லிம்.விளக்கம்:இதே பொருளில் அநேக நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "யார் கருணை காட்டுவதில்லையோ, அவர் மீது இறைவனும் கருணைகாட்ட மாட்டான்." (முஸ்லிம்) "மக்கள் மீது கருணை காட்டாதவர்கள் மீதுஇறைவனும் கருணை காட்ட மாட்டான்." (புஹாரி)இதே போல இன்னொரு நபிமொழியில். "நம்மில் சிறியவர்கள் மீது அன்புசெலுத்தாதவனும் பெரியவர்களின் உரிமைகளை புரிந்து நம்மைச் சேர்ந்தவர்அல்ல" (அபூ தாவூத்) என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அஹ்மத், திர்மிதி ஆகிய நபிமொழித் தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ள ஒருநபிமொழியில், "பெரியவர்களை மதிக்காதவனும் சிறியவர்களிடம் இரக்கத்துடன்நடந்துக் கொள்ளாதவனும் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிற கடமையைநிறைவேற்றாதவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன் (நம்முடையவழிமுறையின்படி நடப்பவன் அல்லன்.)" எனச் சொல்லப்பட்டுள்ளது.இந்த நபிமொழிகளிலிருந்து ஒரு உண்மை எடுப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது: "இறைவனின் அடியார்களுடன் கனிவுடனும் அருளுடனும் நாம் நடந்துக்கொண்டால் மட்டுமே இறைவனின் உதவிக்கும் அவனுடைய இரக்கத்துக்கும்கருணைக்கும் தகுதியானவர்களாக ஆவோம்."நாம் இவ்வாறு அழகிய இளகிய நடத்தையை மேற்கொள்வோமேயானால்இறைவனின் கருணை நமக்குக் கிடைத்து விட்டது என்று பொருள் ஆகும். நம்மிடம் அந்த இளகிய நடத்தையே இல்லையெனில் இறைவனின் உதவிகள், அவனுடைய கருணை, கிருபை ஆகியவற்றை விட்டு நம்மை நாமே வெகு தூரம்விலக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் நாம் என்று பொருள் ஆகி விடும்.நபிமொழியில் 'அன்னாஸ்' (மனிதர்கள்) என்கிற சொல் கையாளப்பட்டுள்ளது. மனிதர்களில் நம்பிக்கையாளர்கள், தீயவர்கள், நிராகரிப்பாளர்கள் எல்லோருமேஅடங்கி விடுவார்கள்.எல்லா மனிதர்களும் நம்முடைய கிருபைக்கும் கருணைக்கும்உரித்தானவர்களே!இன்னும் சொல்லப் போனால் இறைநிராகரிப்பாளர்கள்குறித்து நமக்குள் சற்று அதிகமாகவே அன்பும் கருணையும் தவிப்பும் இருக்கவேண்டும். இறைநிராகரிப்புப் போக்கிலிருந்து இவர்கள் விலக வேண்டாமா? இறைவேதனையிலிருந்து இவர்கள் தப்ப வேண்டாமா? என்கிற கவலைஅதிகமாக இருக்க வேண்டும்.

ஹதிஸ்

நல்லவைக்குப் பரிந்துரை செய்.
1686. நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்'' எனக் கூறினார்கள்.
புஹாரி :1432 அபூமூஸா (ரலி).

நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி..
1687. நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :5534 அபூ மூஸா (ரலி) .

தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்1683. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை. அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை. அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3482 இப்னு உமர் (ரலி).

அண்டை வீட்டார் நலம் பேணுதல்
1684. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6014 ஆயிஷா (ரலி) .1685. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6015 இப்னு உமர் (ரலி).