அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, November 9, 2008

திக்ரின் சிறப்புகள்..

1724. ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).


1725. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).


1726. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).
புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).


1727. இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).

வீரம் குடிகொண்ட நெஞ்சம்

அது ஒரு பெரிய வீடு!பெரிய பெரிய அறைகளைக் கொண்டதாகவும் உயரமானதாகவும் இருந்தது.வீடு என்று சொல்வதைவிட பெரிய அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும்.ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள்.குழந்தைகளும் நிரம்பி இருந்தார்கள்.எல்லோரும் மதீனா நகரத்தைச் சேர்ந்தவர்கள்: முஸ்லிம்கள்.மதீனாவில் சந்தோஷமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டிவிடவேண்டும் என்று இஸ்லாமிய விரோதிகள் படை எடுத்து இருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போர் அது!அகழ்ப் போர் அதாவது அஹ்ஸாப் போர் என்று அதற்குப் பெயர்.ஆண்கள் எல்லாம் போர்க்களத்திற்கு சென்றுவிட்டார்கள்.பெண்களையும் குழந்தைகளையும் போருக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது அல்லவா?எனவே அவர்களை எல்லாம் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள்.ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹூ அன்ஹூ) என்று வயதான ஒரு ஸஹாபி அவரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள்.உள்ளே பெண்களில் ஸஃபிய்யா என்ற ஒரு ஸஹாபிய்யா இருந்தார்கள்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்களுடைய அத்தை! மிகவும் வீரமுள்ள பெண்!!அன்றைக்கும் சரி, இன்iறைக்கும் மிகப் பெரிய எதிரிகள் யார் என்றால் யூதர்கள் தாம்!!யூதன் ஒருவன் பெண்களும் குழந்தைகளும் எங்கே தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். என்பதைப் பார்ப்பதற்காக மதீனா வீதிகளில் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.பாதுகாப்பு குறைவாக இருந்தால் பெண்களைத் தாக்கலாம் என்பது யூதர்களின் திட்டம்!இஸ்லாமிய எதிரிகள் எப்போதும் ஆதரவு அற்ற பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே தாக்குகிறார்கள்.

எப்படியோ ஒருவழியாக பெண்கள் இருக்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துவிட்டான்.அந்த வீட்டை அவன் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.யாரோ ஒருவன் உளவு பார்க்க வந்துள்ளான் என்பது ஸஃபிய்யா அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.அவர்கள் காவல் காத்துக் கொண்டிருந்த ஹஸ்ஸானை எச்சரித்தார்கள்.யாரோ ஒருவன் வெளியே நின்று கொண்டுள்ளான். என்ன ஏது என்று பார்த்து எதிரிதான் என்றால் தீர்த்துக் கட்டிவிடுங்கள்!!----என்று கூறினார்கள். ஹஸ்ஸான் வெளியே போய்ப் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பி வந்துவிட்டார்.மீண்டும் யாரோ நடமாடுவது போல சத்தம் கேட்டது.மறுபடியும் ஸஃபிய்யா ரழியல்லாஹூ அன்ஹா ஹஸ்ஸான் அவர்களை எச்சரித்தார்கள்.ஹஸ்ஸான் மறுபடியும் வெளியே யாரையும் பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார்.ஸஃபிய்யா அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை.உண்மையிலேயே எதிரி எவனாவது வந்திருந்தால் என்ன ஆகும்? என்று பயந்தார்கள்.பெண்களுக்கு ஆபத்து வந்துவிடுமே என்று யோசித்தார்கள்.

கடைசியாக தாமே சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள்.ஹஸ்ஸானுக்குத் தெரியாமல் வெளியே சென்று விட்டார்கள்.அங்கே போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.வாளை ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி ஸஃபிய்யா பாய்ந்தார்கள்.ஒரே வெட்டு! அவன் கதை முடிந்தது.எதிரி ஒழிந்தான். நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள் ஸஃபிய்யா!அமைதியாக உள்ளே திரும்பினார்கள்.ஹஸ்ஸான் அவர்களே! வெளியே எதிரி செத்துக் கிடக்கிறான்.போய் அவனுடைய உடலை அகற்றி விடுங்கள்!---என்று கூறினார்கள்.அங்கே அந்த யூதனை அனுப்பியவர்கள்.அவன் திரும்பி வருவான்: அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.சென்றவன் சென்றவன் தான் திரும்பி வந்தபாடில்லை.ஆஹா! ஏதோ அசம்பாவிதம் ஆகிவிட்டது. சென்றவனைக் காணவில்லை.ஒருவேளை அவனுடைய கதையை முஸ்லிம்கள் முடித்து விட்டார்கள் போலிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.பெண்களைப் பாதுகாக்கும் படை ஒன்றும் மதீனா நகரில் இருக்கின்றது. அந்த படையினர் தாம் நாம் அனுப்பியவனைக் கொன்றுவிட்டார் என்று அவர்கள் நம்பிவிட்டார்கள்.இறைநம்பிக்கை-ஈமான் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தால் இறைவனுடைய அச்சம் ஒன்று மட்டும் உள்ளத்தில் வேறூன்றிப் பாய்ந்திருந்தால் ஸஃபிய்யா அவர்களைப் போல நாமும் வீரப் பெண்மணியாக மாறலாம்:இஸ்லாமியப் பணியில் சாதித்துக் காட்டலாம்!அல்லாஹ்வுடைய அன்பை அள்ளிக் கொள்ளலாம்.

உயர்ந்த உள்ளம்

அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.அல்லாஹ்வின் பிரியத்தைச் சம்பாதித்துக்கொண்ட ஒரு நபித்தோழர்.அப்துல்லாஹ் பார்வை அற்றவர் பிறக்கும்போதில் இருந்தே அவருக்குக் கண் தெரியாது.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் அப்துல்லாஹ்வை மதீனத்து பள்ளிவாசலில் முஅத்தின் ஆக நியமித்து இருந்தார்கள்.பள்ளிவாசலில் தொழுகைக்காக பாங்கு சொல்கிறாரே அவர்தான் முஅத்தின். மோதினார் என்று அவரைச் சொல்லக்கூடாது.மதீனா பள்ளிவாசலில் இரண்டு முஅத்தின்கள் இருந்தார்கள்.ஒருவர் பிலால்: இன்னொருவர் அப்துல்லாஹ் இகாமத் சொல்வார்.தொழுகைக்கு கொஞ்சநேரத்துக்கு முன்பாக கொடுக்கப்பட்டால் பாங்கு!தொழுகைக்காக நின்றபின்பு கொடுக்கப்பட்டால் இகாமத்!

முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று பலமுறை எதிரிகள் படை எடுத்துவந்தார்கள்.ஸஹாபாக்கள் போருக்காக சென்றுவிடும் போது அப்துல்லாஹ் மதீனாவிலேயே தங்கி இருப்பார்.தற்காலிக தலைமைப் பொறுப்பில் அவரையே இறைத்தூதர்; நியமிப்பார்கள்.ஆனாலும் அவருக்கு மிகவும் கவலையாகவும் ஆதங்கமாகவும் இருக்கும்.ஜிஹாதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்.ஜிஹாதுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தங்கிவிட்டவர்கள்.முஜாஹிதீன்களை விட மட்டமானவர்கள்: தரத்தில் குறைந்தவர்கள் என்று எல்லாம் அல்குர்ஆன் வசனங்கள் இறங்கும்போது அவருடைய உள்ளம் அப்படியே துடிக்கும்! கண்கள் குளமாகி விடும்!உடல் குறைபாடுகளால், தவிர்க்க முடியாத காரணங்களால் போருக்குப் போகாமல் விட்டவர்கள் மீது குற்றமில்லை என்று அப்துல்லாஹ்வுக்காகவே ஒரு வசனம் இறங்கியது.அப்போதும் அவர் மனம் ஆறவில்லை.முஜாஹிதீனாக மாற முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே தான் இருந்தார்.உயர்ந்த உள்ளங்கள் சாதாரண செயல்களால் திருப்தி அடைவதே இல்லை.உயர்ந்த உள்ளங்கள் சிகரத்தில் வீற்று இருப்பதையே விரும்புகின்றன!கண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை: ஜிஹாதில் கலந்துகொண்டே தீருவது என்ற முடிவுக்கு அப்துல்லாஹ் வந்துவிட்டார்.இரண்டாம் கலீஃபா உமருடைய காலத்தில் ஈரான் நாட்டினரோடு சண்டை நடைபெற்றது.இன்று அமெரிக்கா போன்று அன்று ஈரான் ஒரு வல்லரசு.படுபயங்கரமான போர் அது! காதிஸிய்யா போர் என்று அதற்குப் பெயர்.அந்தப் போரில் அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.இரண்டு அணிகளுக்கு இடையே என்னை நிறுத்திவிடுங்கள்!முஸ்லிம்படையின் கொடியை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.நான் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பேன்!கண் தெரியாத என்னால் எங்குமே நகரமுடியாது!முஸ்லிம்களின் கொடி உயர்ந்தே இருக்கும்!!----என்று அப்துல்லாஹ் கூறினார்.ஜிஹாதுக்கான பெயர்ப் பட்டியலில் தன்னுடைய பெயரையும் கொடுத்தார்.

சஅத் இப்னு அபீ வக்காஸ் என்ற வீர ஸஹாபியின் தலைமையில் படை கிளம்பியது.பெரும் அமர்க்களத்தோடு போர் நடைபெற்றது. இரண்டு நாட்கள் போர் தொடர்ந்தது.இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்தது!ஏராளமான ஸஹாபாக்கள் ஷஹீத் ஆனார்கள்!இறந்துபோன ஷூஹதாக்களின் உடல்களிடையே அப்துல்லாஹ்வின் உடலும் கிடந்தது.முஸ்லிம்களின் வெற்றிக்கொடியை ஏந்தியவாறு அப்துல்லாஹ் வீழ்ந்து கிடந்தார்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!இறைவனுடைய வழியில்தான் இறக்க வேண்டும் என்பது நம்முடைய தீராத ஆசையாக இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இறப்பும் அவ்வாறே அமையும்!உயர்ந்த உள்ளங்கள் சாதாரண மனிதர்கள் பார்க்கும்படி இருப்பதில்லை.அண்ணாந்து பார்க்கும்படி அவைவெகு உயரத்திலேயே காணப்படுகின்றன.