அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, October 12, 2008

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'சொர்க்கத்தில் மக்களை நுழையச் செய்வதில் மிக அதிகமானவை எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இறையச்சமும், நற்குணமும்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நரகத்தில் மக்களை அதிக அளவில் நுழையச் செய்வது எது? என்று கேட்கப்பட்டது. ''நாவும், மறைவுறுப்பும் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 627)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மூஃமின்களில் இறைநம்பிக்கையில் முழுமையானவர், அவர்களில் குணத்தால் மிக அழகியவராவார். தங்களின் மனைவியரிடம் சிறந்தவர் தான் உங்களில் சிறந்தவர் ஆவார்.'' ஏன்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 628)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக ஒரு மூஃமின், தன் அழகிய குணத்தின் காரணமாக, நின்று வணங்கி நோன்பு நோற்கக் கூடியவரின் தகுதியை அடைவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 629)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன் ஆவான். ஒவ்வொரு காரியங்களிலும் அவன் மென்மையையே விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 633)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மென்மை, இடம்பெறுகின்ற எந்தக் காரியமும், அது அழகாக்கி விடுகிறது. மேலும் அது இடம் பெறாத எதுவும், சேதப்படுத்தி விடுகிறது'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 635)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடக்காதீர்கள். (மக்களை) வாழ்த்துங்கள். (அவர்களை) வெறுக்காதீர்கள்.'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 637)

No comments: