அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, November 23, 2008

ஹதித்

1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

“இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்.”,
என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.
[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
” நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.”
மேலும் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக நான் எண்ணுவதாவது,

” ஒரு மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான். அவனே அதைப் பாதுகாப்பவனும் ஆவான். எனவே நீங்கள் அனைவரும் தமக்கு கீழுள்ள குழந்தைகளுக்கும், செல்வத்திற்கும் பொறுப்பாளி ஆவீர்கள்” (புகாரி தொகுதி : 3, புத்தகம் : 41, எண் : 592)

ஸஹல் பின் ஸா’த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (ரதியல்லாஹுஅன்ஹும்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் , ” ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) என்னிடத்தில் வந்து,
‘ முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ‍ ஒரு நம்பிக்கையாளனின் மேன்மை, அவனின் இரவு வணக்கத்தில் / ஃகியாமில் உள்ளது, மற்றும் அவனது கண்ணியம், அவன் பொருளுதவிக்காக மற்றவர்களை எதிர்பாராமல் வாழ்வதில் உள்ளது’
என்று கூறினார்”.
[ அத் தபரானி அவர்கள் 'அல் அஸ்வத்'தில் பதிவு செய்துள்ளார். பைஹகீயின் நூலிலும், இன்னும் பலரின் நூலிலும் உள்ளது. அல்பானீ அவர்கள் தன்னுடைய 'அஸ் ஸஹீஹாஹ்' நூலில் (பக்கம்-831) 'ஹஸன்' தரமுள்ளது என பதிவு செய்துள்ளனர்]

No comments: