அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, November 9, 2008

வீரம் குடிகொண்ட நெஞ்சம்

அது ஒரு பெரிய வீடு!பெரிய பெரிய அறைகளைக் கொண்டதாகவும் உயரமானதாகவும் இருந்தது.வீடு என்று சொல்வதைவிட பெரிய அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும்.ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள்.குழந்தைகளும் நிரம்பி இருந்தார்கள்.எல்லோரும் மதீனா நகரத்தைச் சேர்ந்தவர்கள்: முஸ்லிம்கள்.மதீனாவில் சந்தோஷமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டிவிடவேண்டும் என்று இஸ்லாமிய விரோதிகள் படை எடுத்து இருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போர் அது!அகழ்ப் போர் அதாவது அஹ்ஸாப் போர் என்று அதற்குப் பெயர்.ஆண்கள் எல்லாம் போர்க்களத்திற்கு சென்றுவிட்டார்கள்.பெண்களையும் குழந்தைகளையும் போருக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது அல்லவா?எனவே அவர்களை எல்லாம் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள்.ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹூ அன்ஹூ) என்று வயதான ஒரு ஸஹாபி அவரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள்.உள்ளே பெண்களில் ஸஃபிய்யா என்ற ஒரு ஸஹாபிய்யா இருந்தார்கள்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்களுடைய அத்தை! மிகவும் வீரமுள்ள பெண்!!அன்றைக்கும் சரி, இன்iறைக்கும் மிகப் பெரிய எதிரிகள் யார் என்றால் யூதர்கள் தாம்!!யூதன் ஒருவன் பெண்களும் குழந்தைகளும் எங்கே தங்கவைக்கப் பட்டுள்ளார்கள். என்பதைப் பார்ப்பதற்காக மதீனா வீதிகளில் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.பாதுகாப்பு குறைவாக இருந்தால் பெண்களைத் தாக்கலாம் என்பது யூதர்களின் திட்டம்!இஸ்லாமிய எதிரிகள் எப்போதும் ஆதரவு அற்ற பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே தாக்குகிறார்கள்.

எப்படியோ ஒருவழியாக பெண்கள் இருக்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துவிட்டான்.அந்த வீட்டை அவன் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தான்.யாரோ ஒருவன் உளவு பார்க்க வந்துள்ளான் என்பது ஸஃபிய்யா அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.அவர்கள் காவல் காத்துக் கொண்டிருந்த ஹஸ்ஸானை எச்சரித்தார்கள்.யாரோ ஒருவன் வெளியே நின்று கொண்டுள்ளான். என்ன ஏது என்று பார்த்து எதிரிதான் என்றால் தீர்த்துக் கட்டிவிடுங்கள்!!----என்று கூறினார்கள். ஹஸ்ஸான் வெளியே போய்ப் பார்த்தார். யாரையும் காணவில்லை. திரும்பி வந்துவிட்டார்.மீண்டும் யாரோ நடமாடுவது போல சத்தம் கேட்டது.மறுபடியும் ஸஃபிய்யா ரழியல்லாஹூ அன்ஹா ஹஸ்ஸான் அவர்களை எச்சரித்தார்கள்.ஹஸ்ஸான் மறுபடியும் வெளியே யாரையும் பார்க்காமல் திரும்பி வந்துவிட்டார்.ஸஃபிய்யா அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை.உண்மையிலேயே எதிரி எவனாவது வந்திருந்தால் என்ன ஆகும்? என்று பயந்தார்கள்.பெண்களுக்கு ஆபத்து வந்துவிடுமே என்று யோசித்தார்கள்.

கடைசியாக தாமே சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள்.ஹஸ்ஸானுக்குத் தெரியாமல் வெளியே சென்று விட்டார்கள்.அங்கே போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.வாளை ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி ஸஃபிய்யா பாய்ந்தார்கள்.ஒரே வெட்டு! அவன் கதை முடிந்தது.எதிரி ஒழிந்தான். நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள் ஸஃபிய்யா!அமைதியாக உள்ளே திரும்பினார்கள்.ஹஸ்ஸான் அவர்களே! வெளியே எதிரி செத்துக் கிடக்கிறான்.போய் அவனுடைய உடலை அகற்றி விடுங்கள்!---என்று கூறினார்கள்.அங்கே அந்த யூதனை அனுப்பியவர்கள்.அவன் திரும்பி வருவான்: அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.சென்றவன் சென்றவன் தான் திரும்பி வந்தபாடில்லை.ஆஹா! ஏதோ அசம்பாவிதம் ஆகிவிட்டது. சென்றவனைக் காணவில்லை.ஒருவேளை அவனுடைய கதையை முஸ்லிம்கள் முடித்து விட்டார்கள் போலிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.பெண்களைப் பாதுகாக்கும் படை ஒன்றும் மதீனா நகரில் இருக்கின்றது. அந்த படையினர் தாம் நாம் அனுப்பியவனைக் கொன்றுவிட்டார் என்று அவர்கள் நம்பிவிட்டார்கள்.இறைநம்பிக்கை-ஈமான் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தால் இறைவனுடைய அச்சம் ஒன்று மட்டும் உள்ளத்தில் வேறூன்றிப் பாய்ந்திருந்தால் ஸஃபிய்யா அவர்களைப் போல நாமும் வீரப் பெண்மணியாக மாறலாம்:இஸ்லாமியப் பணியில் சாதித்துக் காட்டலாம்!அல்லாஹ்வுடைய அன்பை அள்ளிக் கொள்ளலாம்.

No comments: