அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, November 9, 2008

உயர்ந்த உள்ளம்

அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.அல்லாஹ்வின் பிரியத்தைச் சம்பாதித்துக்கொண்ட ஒரு நபித்தோழர்.அப்துல்லாஹ் பார்வை அற்றவர் பிறக்கும்போதில் இருந்தே அவருக்குக் கண் தெரியாது.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் அப்துல்லாஹ்வை மதீனத்து பள்ளிவாசலில் முஅத்தின் ஆக நியமித்து இருந்தார்கள்.பள்ளிவாசலில் தொழுகைக்காக பாங்கு சொல்கிறாரே அவர்தான் முஅத்தின். மோதினார் என்று அவரைச் சொல்லக்கூடாது.மதீனா பள்ளிவாசலில் இரண்டு முஅத்தின்கள் இருந்தார்கள்.ஒருவர் பிலால்: இன்னொருவர் அப்துல்லாஹ் இகாமத் சொல்வார்.தொழுகைக்கு கொஞ்சநேரத்துக்கு முன்பாக கொடுக்கப்பட்டால் பாங்கு!தொழுகைக்காக நின்றபின்பு கொடுக்கப்பட்டால் இகாமத்!

முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று பலமுறை எதிரிகள் படை எடுத்துவந்தார்கள்.ஸஹாபாக்கள் போருக்காக சென்றுவிடும் போது அப்துல்லாஹ் மதீனாவிலேயே தங்கி இருப்பார்.தற்காலிக தலைமைப் பொறுப்பில் அவரையே இறைத்தூதர்; நியமிப்பார்கள்.ஆனாலும் அவருக்கு மிகவும் கவலையாகவும் ஆதங்கமாகவும் இருக்கும்.ஜிஹாதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்.ஜிஹாதுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தங்கிவிட்டவர்கள்.முஜாஹிதீன்களை விட மட்டமானவர்கள்: தரத்தில் குறைந்தவர்கள் என்று எல்லாம் அல்குர்ஆன் வசனங்கள் இறங்கும்போது அவருடைய உள்ளம் அப்படியே துடிக்கும்! கண்கள் குளமாகி விடும்!உடல் குறைபாடுகளால், தவிர்க்க முடியாத காரணங்களால் போருக்குப் போகாமல் விட்டவர்கள் மீது குற்றமில்லை என்று அப்துல்லாஹ்வுக்காகவே ஒரு வசனம் இறங்கியது.அப்போதும் அவர் மனம் ஆறவில்லை.முஜாஹிதீனாக மாற முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே தான் இருந்தார்.உயர்ந்த உள்ளங்கள் சாதாரண செயல்களால் திருப்தி அடைவதே இல்லை.உயர்ந்த உள்ளங்கள் சிகரத்தில் வீற்று இருப்பதையே விரும்புகின்றன!கண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை: ஜிஹாதில் கலந்துகொண்டே தீருவது என்ற முடிவுக்கு அப்துல்லாஹ் வந்துவிட்டார்.இரண்டாம் கலீஃபா உமருடைய காலத்தில் ஈரான் நாட்டினரோடு சண்டை நடைபெற்றது.இன்று அமெரிக்கா போன்று அன்று ஈரான் ஒரு வல்லரசு.படுபயங்கரமான போர் அது! காதிஸிய்யா போர் என்று அதற்குப் பெயர்.அந்தப் போரில் அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.இரண்டு அணிகளுக்கு இடையே என்னை நிறுத்திவிடுங்கள்!முஸ்லிம்படையின் கொடியை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.நான் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பேன்!கண் தெரியாத என்னால் எங்குமே நகரமுடியாது!முஸ்லிம்களின் கொடி உயர்ந்தே இருக்கும்!!----என்று அப்துல்லாஹ் கூறினார்.ஜிஹாதுக்கான பெயர்ப் பட்டியலில் தன்னுடைய பெயரையும் கொடுத்தார்.

சஅத் இப்னு அபீ வக்காஸ் என்ற வீர ஸஹாபியின் தலைமையில் படை கிளம்பியது.பெரும் அமர்க்களத்தோடு போர் நடைபெற்றது. இரண்டு நாட்கள் போர் தொடர்ந்தது.இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்தது!ஏராளமான ஸஹாபாக்கள் ஷஹீத் ஆனார்கள்!இறந்துபோன ஷூஹதாக்களின் உடல்களிடையே அப்துல்லாஹ்வின் உடலும் கிடந்தது.முஸ்லிம்களின் வெற்றிக்கொடியை ஏந்தியவாறு அப்துல்லாஹ் வீழ்ந்து கிடந்தார்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!இறைவனுடைய வழியில்தான் இறக்க வேண்டும் என்பது நம்முடைய தீராத ஆசையாக இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இறப்பும் அவ்வாறே அமையும்!உயர்ந்த உள்ளங்கள் சாதாரண மனிதர்கள் பார்க்கும்படி இருப்பதில்லை.அண்ணாந்து பார்க்கும்படி அவைவெகு உயரத்திலேயே காணப்படுகின்றன.

No comments: