அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Saturday, November 8, 2008

இறைத்தூதரின் பிரார்த்தனை வேண்டும்

சஅத் இப்னு உபாதா ஓர் உன்னதமான நபித்தோழர்.ரழியல்லாஹூ அன்ஹூஅன்சாரிகளின் தலைவர்களில் ஒருவர். அருமையான ஸஹாபி.ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் சஅதைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்தார்கள்.வீட்டின் ஒரமாக நின்று கொண்டார்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள்.சஅத் உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். ஆனால் மெதுவாக பதில் கூறினார்கள்.பதில் ஏதும் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அவர்கள் மீண்டும் ஒருமுறை ஸலாம் கூறினார்கள்.

சாதாரணமாக ஒருவரைப் பார்த்து நாம் ஸலாம் கூறினால் அவருக்காக நாம் துஆ செய்கிறோம் என்று தான் பொருள்!ஒரு முஸ்லிமுக்காக இன்னொரு முஸ்லிம் துஆ செய்தால் அல்லாஹ் அதனை உடனே ஏற்றுக் கொள்வான்.சாதாரண முஸ்லிமுடைய துஆவையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பானா?கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான்.ஆகையால் இந்த முறையும் சஅத் பதில் சொல்லவில்லை.மெதுவாக பதில் கூறினார்கள். சஅதுடைய மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார்.ஷஷஅப்பா! ரசூலுல்லாஹ் ஸலாம் கூறுகிறார்கள். நீங்கள் பதில் சொல்லாமலேயே இருக்கிறீர்களே!-- என்று கேட்டார்.ஷஷஅமைதியாக இரு! இறைத்தூதர் ஸலாம் கூறினால் நமக்கு நலம் ஏற்படும். ---என்றால் சஅத்!மூன்றாவது முறையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் ஸலாம் கூறினார்கள்.மூன்றாவது முறையும் மெதுவாகவே சஅத் பதில் கூறினார்.மூன்று முறை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் நாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.மூன்றுமுறை கூப்பிட்டும் பதில் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினார்.இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் போவதைக் கண்ட சஅத் ஓடோடிச் சென்று வஅலைக்கும் அஸ்ஸலாம் என்று சப்தமாகக் கூறினார்ஷஷஇறைத்தூதர் அவர்களே! தங்களுடைய துஆவை பெற்றுக் கொள்ளவேண்டும்.அதன்மூலமாக அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்;.என்பதற்காகத்தான் நான் சப்தமாக பதில் கூறாமல் மெதுவாக பதில் கூறினேன். ஆகையால் தவறாக எடுத்துக் கொள்ளமல் என் வீட்டுக்கு வாருங்கள்!!இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.இறைத்தூதரை சந்தோஷம் அடையச் செய்யமுடியும் என்றால் அதனைவிடப் பெரும் சந்தோஷம் என்னவாக இருக்கப் போகின்றது?

No comments: