அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Saturday, November 8, 2008

மனைவி என்றால் ஸாலிஹான மனைவி

அழகான குழந்தை அது!நான் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற தோற்றம்.அந்தக் குழந்தையை யார் பார்த்தாலும் உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள்.ஒருநாள் திடீரென்று அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.குழந்தையின் தந்தையான அபுதல்ஹா வெளியே வேளை விஷயமாக போகக் கிளம்பினார்.குழந்தையின் தாய் உம்முஸூலைம் அக்கறையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டார்.வீடு திரும்பியவுடன் குழந்தையைப் பற்றித்தான் முதலில் விசாரித்தார்;.எப்படி இருக்கிறது? உடம்பு சரியாகிவிட்டதா?பரவாயில்லை. முன்பைவிட இப்போது நிம்மதியாக உள்ளான்! என்றார் அந்தத் தாய்!குழந்தையை கொண்டு வாருங்கள். பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கின்றது!-என்றார் அந்த தந்தை.குழந்தை தூங்கிக் கொண்டுள்ளது. இப்போது தொந்தரவு தரவேண்டாம். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தூங்குங்கள். காலையில் எழுந்ததும் பார்த்துக் கொள்ளலாம்! -என்று உம்முஸூலைம் கூறிவிட்டார்கள்.அபுதல்ஹாவும் தன்னுடைய மனைவியோடு தூங்கச் சென்றுவிட்டார்.காலையில் எழுந்ததும் உம்முஸூலைம் தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்கள்.அமைதியாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:

உங்களிடம் யாரேனும் ஒருவர் ஒருபொருளைக் கொடுத்து வைத்திருந்து அதைத் தருமாறு கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?அவருடைய பொருளை அவர் கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். உடனே நான் கொடுத்து விடுவேன்! என்றார் அபுதல்ஹா.அப்படியா! அப்படி என்றால் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்த அல்லாஹ் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டான்! -என்றார் உம்முஸூலைம் ரழியல்லாஹூ அன்ஹா.அபுதல்ஹா அமைதியாக நின்று கொண்டிருந்தார்.ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? போய் கஃபன், தஃபன் வேலைகளைப் பாருங்கள்!ஒரு நிமிடம் விழிகளை உயர்த்தி அபுதல்ஹா தன்னுடைய மனைவியைப் பார்த்தார்.அதன்பின்பு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார்.அதன்பிறகு அண்ணாலாரிடம் சென்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறினார்.இரவில் ஒன்றாகத் தூங்கினீர்களா? என்று இறைத்தூதர் விசாரித்து.யா அல்லாஹ்! வளமான குழந்தைச் செல்வத்தை இவர்களுக்குக் கொடு!! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.அவ்வாறே ஒரு குழந்தை பிறந்தது.அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள்.மிகவும் அறிவுள்ள குழந்தையாக அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற குழந்தையாக அது வளர்ந்தது.அபு தல்ஹாவுக்குக் கிடைத்த மனைவியும் ஸாலிஹான மனைவி! குழந்தையும் ஸாலியான குழந்தை!அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்ந்தால் எல்லா அருட்கொடைகளும் கிடைக்கும்!! நமக்கும்தான்!

No comments: